Monday 23 May 2011

சமச்சீர் கல்வி - அம்மா அரசின் அதிரடி..

சமச்சீர் கல்வி - அம்மா அரசின் அதிரடி..

தி மு க ஆட்சியில் மக்கள், கல்வித்துறை அதிகாரிகள், சிறுபான்மை இனத்தவர், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வேண்டாம் என்று சொன்ன போதிலும் , தன் சுய தம்பட்டதுக்கு அள்ளி தெளித்த கோலமாக கருணாநிதி சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தார்.. ! 

முதல்வர் அம்மா அவர்கள், களை எடுக்கும் வேலையாக  இந்த சமச்சீர் கல்வி திட்டத்துக்கு தடைவிதித்துள்ளார். பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் , அவசர கோலத்தில் தி மு க கொண்டவந்த சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்தி மாணவர்கள் படிப்பை சீரழிக்க மனமில்லாது , அதே நேரம் அதை நெறி படுத்த போதிய  அவகாசம் இல்லாத காரணத்தால் இந்த தடையை அம்மா பிறப்பித்துள்ளார்.  

மீண்டும் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து,  சீரிய முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்..

அம்மாவின் இந்த முடிவு  அனைத்து தரப்பு மக்களையும் , பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தியுள்ளது.

திமுக மற்றும் சிலர் மட்டுமே அம்மாவின் முடிவு தவறு என்று விதண்டா வாதாதில் இறங்கி உள்ளனர்

No comments:

Post a Comment